
கடந்த வந்த காதலும் முறிவுகளும் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பதிலளித்துள்ளார். இது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி ஒன்றில், ‘வாழ்க்கையில் ஏதேனும் வருத்தங்கள் உள்ளதா?’ என்ற கேட்கப்பட்டது. அதற்கு, “நான் சிலரை புண்படுத்தியிருக்கிறேன். அப்படிச் செய்யாது இருந்திருக்கலாம் . ஆனாலும், அதில் எனக்கு வருத்தம் எல்லாம் இல்லை.
சில நேரங்களில் கோமாளி போல் நடந்து கொண்டிருந்திருக்கிறேன். அவ்வளவே. அது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால், என் வாழ்வில் சில மதிப்புமிகு நபர்கள் இருந்துள்ளனர். அவர்களை நான் தெரியாமல் காயப்படுத்தியிருக்கிறேன். இப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்பதில் கவனம் செலுத்துகிறேன்.