
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடந்தது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி பாதுகாப்பு படைகளின் தலைவர் அணில் சவுகான் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று விளக்கியிருந்தார். இந்நிலையில், அதற்கு அடுத்தநாளில் பிரதமருடனான இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.