
புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் வட்டம், கீழக்காயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன், இரண்டு மகள் என்று மூன்று குழந்தைகளும் உள்ளனர். வீரமுத்துக்கும், அவரது மனைவிக்கும் கருது வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
அதுவும், சில மாதங்களாகவே கணவன், மனைவி இருவருக்கும் குடும்பத்தில் அடிக்கடி தகராறு நடந்துள்ளன. இதனால், கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு அவரது மனைவி சென்றுவிட்டார்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முன்புதான் மனைவியைக் கல்லுப்பள்ளத்திலிருந்து, கீழக்காயம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் வீரமுத்து.
இந்நிலையில், இருவரும் நேற்று முன் தினம் (ஏப்ரல் 26) இரவு அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் போடப்பட்ட நாடகத்தைப் பார்க்கச் சென்றுவிட்டு நேற்று (ஏப்ரல்) அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளனர்.
ஆனால், வீட்டுக்கு வந்தவுடன் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் வீரமுத்து மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சம்பட்டிவிடுதி காவல் நிலைய போலீஸார் உடல்களைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், தம்பதியினர் இருவரும் இறந்துபோயுள்ளதால், அவர்களது மூன்று குழந்தைகளும் நிர்க்கதியாக நிற்கின்றனர்.
மனைவியோடு ஏற்பட்ட தகாறில் அவரைக் கொலை செய்துவிட்டு கணவர் தானும் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs