
மதுரை/சிவகங்கை: நோயாளிகளின் உடல்நிலை குறித்த விவரமறிந்து, சிகிச்சை அளிக்க உதவும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அடையாள அட்டையை (ஆபா) ஆதார் மூலம் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து பொதுமக்களிடம் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முதல்வர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை இழப்பீடு பெறவும் அனுமதிப்பதால் முதல்வர் காப்பீட்டுத் திட்டம் கிராம மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.