• April 27, 2025
  • NewsEditor
  • 0

நீதிமன்ற அவமதி்ப்பு வழக்கில் கல்லூரிக் கல்வி இயக்குநர் வரும் ஜூன் 2-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்படும் 6 கல்லூரிகளில் காலியாக இருந்த 130 உதவிப் பேராசிரியர்கள், ஒரு நூலகர், ஒரு உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்களி்ன் கல்வி மற்றும் எதிர்காலம் கருதி காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்படும் தேர்வு நடவடிக்கைகளுக்கு அரசின் முன் அனுமதி தேவையில்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *