
குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத் நகரில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தை சேர்ந்த 550-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட உள்ளனர்.
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களை கண்டுபிடித்து வெளியேற்றும் பணியில் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றன.