
மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டனை வழங்க வகை செய்யும் திருத்த சட்ட மசோதா, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறை தண்டனை விதிக்கும் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்தார். இதில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் தளவாய் சுந்தரம் (அதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் வலியுறுத்தினர். என்னென்ன திருத்தங்கள் என்பதை எழுத்துப்பூர்வமாக தருமாறு பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார். இந்த மசோதா வரும் ஏப்ரல் 29-ம் தேதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.