
மதுரை: பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி பரிசோதனை முடித்தப் பிறகே, இந்த திட்டத்தை தொடங்கி வைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால், மே மாதம் முதல் வாரம் முதல்வர் தொடங்கி வைப்பதாக இருந்த இந்த திட்டம் மீண்டும் ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போகிறது.
மதுரை மாநகராட்சிக்கு கடந்த கால் நூற்றாண்டாக வைகை-1, வைகை-2, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் அடுத்த 50 ஆண்டுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவகையில், 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க ‘அம்ரூத்’ திட்டத்தில் ரூ.1,295.76 கோடியில் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது.