• April 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கள்ள ஓட்டுப் போட முயன்ற திமுகவைச் சேர்ந்த நபரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு பிப்.19 அன்று உள்ளாட்சி தேர்தலின்போது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் தாக்கினர். நரேஷ்குமாரை அரை நிர்வாணமாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டை போலீஸார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *