• April 26, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: முக்கிய சாலை சந்திப்புகளில் ஒரு பஸ் நிற்கும் அளவுக்கு கம்புகளை நட்டு போடப்பட்டுள்ள ‘நிழல் பந்தல்’களாலும், சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் போடப்பட்டுள்ள ‘நிழல் பந்தல்’களாலும் மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மதுரை மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகள், வாகனப் போக்குவரத்துக்கு தகுந்தார்போல் விசாலமாக இல்லாமல் குறுகலாக உள்ளன. இந்த நிலையில், ஒவ்வொரு போக்குவரத்து சிக்கனல்களிலும் நான்கு சாலைகள் சந்திப்பதால், வாகன ஓட்டிகள் சாலைகளை கடந்து செல்வதற்கான சிக்னல் விழுவதற்கு குறைந்தப்பட்சம் 5 நிமிடங்கள் வரை ஆகிறது. ஆனால், சாலைகளில் நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் காத்திருப்பதால் ஒரு போக்குவரத்து சிக்னலை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் குறைந்தப்பட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகப்பட்சம் 15 நிமிடங்கள் வரை ஆகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *