• April 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார். தகவல் அறிந்து முதல்வர் ஸ்டாலின் பேரவைக்கு விரைந்து வந்து, துரைமுருகனிடம் நலம் விசாரித்தார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்ட கூட்டத்தொடர் வரும் ஏப்.29-ம் தேதியுடன் நிறைவடைகிறது. சனிக்கிழமை கேள்வி நேரத்தின்போது பல்வேறு துறை அமைச்சர்கள் பதில் அளித்துக் கொண்டிருந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துக் கொண்டிருந்தபோது, அமைச்சர் துரைமுருகன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வெளியில் செல்ல முயன்றார். அவர் இரு மேசைகளுக்கு இடையே குறுகலான வழியில் நுழைந்து செல்லும்போது காலை சுமார் 10.28 மணி அளவில் கால் இடறி கீழே விழுந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *