• April 26, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் தேவையான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயபாஸ்கர் பேசும்போது, "விராலிமலை தொகுதியில் அதிக அளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் பேரூராட்சியில் ஜல்லிக்கட்டு திடலில் குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா? எங்கெல்லாம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக எப்போதும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர முடியுமா?" என கேள்வி எழுப்பினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *