• April 26, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு வலதுசாரி அரசியல்வாதிகள் தான் காரணம். அத்தகைய வலதுசாரி அரசியலை என்றைக்கும் எதிர்ப்பேன், தமிழக மக்கள் வலதுசாரி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசினார்.

மதுரை முனிச்சாலையில் இன்று மதிமுக மதுரை மண்டலம் சார்பில் மத்திய அரசின் வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: “காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் ஈவு இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். குழந்தைகள் முன்பு பெற்றோர்களையும், மனைவி முன்பு கணவனையும் சுட்டுக் கொன்றுள்ளனர். இதுபோன்ற இழி செயலை, பாவச் செயலை எந்த மதமும் ஆதரிப்பதில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *