
ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பனில் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, "பஹல்காம் தாக்குலை முதலில் அவர்கள் உணரவில்லை. இந்தியாதான் இந்த தாக்குதலையே நடத்தியதாகக் கூறியவர்கள் அவர்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு, இப்போது பதில் சொல்வது கடினம். அவர்களின் அறிக்கைகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. என்ன நடந்ததோ அது துரதிர்ஷ்டவசமானது, அது நடந்திருக்கக் கூடாது.