
சென்னை: மறைந்த உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடலுக்கு வாடிகன் சென்று அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் இருதயராஜ் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து அரசு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்ததும் மிகவும் வேதனையடைந்தார். அதனைத் தொடர்ந்து விடுத்த இரங்கல் செய்தியில், ‘பரிவோடும் முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கச் திருச்சபையினை வழிநடத்தி பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.