• April 25, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கும் அவருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் கடந்த 2024 ஜூன் மாதத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறி, அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி, கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகுமாறு இபிஎஸ்-க்கு சம்மன் அனுப்பியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *