• April 25, 2025
  • NewsEditor
  • 0

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து காக்கும் வகையில், சென்னை அண்ணா சாலை உட்பட பல்வேறு முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்து நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

ஆனால், இப்படி போக்குவரத்து சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள பசுமை நிழல் பந்தல்கள் சில, காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்களை மறைந்தபடி உள்ளன. குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் அண்ணாசாலையில் பெரியார் சிலை அருகே உள்ள பசுமை பந்தல், ஸ்பென்சர் பிளாசா சிக்னல் அருகில் போடப்பட்ட பசுமை பந்தல் உட்பட மேலும் சில பசுமை பந்தல்கள் சிசிடிவி கேமராக்களை மறைத்தபடி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *