• April 25, 2025
  • NewsEditor
  • 0

திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில் முகப்பு பகுதியில் ரூ.4.30 கோடி மதிப்பில் புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 80% நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் நிலையில், உள்ளூர் மக்கள் மற்றும் மீனவர்களுக்கு கட்டண சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில் அமைந்துள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயில் அறநிலையத்துறை மற்றும் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது.

இக்கோயிலில், சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இதனால், பக்தர்களின் அடிப் படை வசதிகளுக்காக அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈசிஆர் சாலையையொட்டி உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம் அமைக்க தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டு ரூ.4.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *