
புதுடெல்லி: “நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட சென்றடையாது என்பதை உறுதி செய்வோம்” என்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.
ஜம்மு – காஷ்மீரின்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் குழு ஒன்று தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு, இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.