• April 25, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: கட்சி கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு கோரி அக்கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை
உயர் நீதிமன்றம் கோடை விடுமுறைக்கு பிறகு தள்ளிவைத்தது.

மதுரையில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அதிமுக நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற கெடு விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றுவதிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விலக்கு அளிக்கக்கோரி அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *