
புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, அதற்கான காரணங்களை தமது பதில் மனுவில் விவரித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 1,332 பக்கங்கள் கொண்ட பதில் மனுவில், ‘வக்பு திருத்த சட்டத்தில் மத சுதந்திரம் பறிக்கப்படும் என்று வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டம் யாருடைய மத சுதந்திரத்தையும் பறிக்காது. வக்பு நிர்வாகத்தில் திறம்பட்ட மேலாண்மை, வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவே சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.