• April 25, 2025
  • NewsEditor
  • 0

பஹல்​காம் தாக்​குதலில் தொடர்​புடைய​வர்​களுக்கு கற்​பனைக்​கும் எட்​டாத அளவுக்கு தண்​டனை வழங்​கப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். பிஹாரின் மது​பானி நகரில் நேற்று தேசிய பஞ்​சா​யத்து ராஜ் தின விழா நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.13,480 கோடி மதிப்​பிலான திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார்.

சில திட்​டங்​களுக்கு அவர் அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: கிராமங்​கள் வளர்ச்சி அடைந்​தால்​தான் பாரதம் வளர்ச்சி அடை​யும் என்று மகாத்மா காந்தி கூறி​னார். இதை கருத்​தில் கொண்டு கிராமங்​களின் வளர்ச்​சிக்கு மத்​திய அரசு முன்​னுரிமை அளித்து வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *