
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிஹாரின் மதுபானி நகரில் நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது ரூ.13,480 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் பாரதம் வளர்ச்சி அடையும் என்று மகாத்மா காந்தி கூறினார். இதை கருத்தில் கொண்டு கிராமங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.