
திருவள்ளூர்: திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாள பகுதியில் போல்ட் நட்டுகள் அகற்றப்பட்டிருந்ததால், ரயிலை கவிழ்க்க சதியா? என, ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை- அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் இன்று காலை திடீரென சிக்னல் கட்டாகி இருந்தது ரயில்வே ஊழியர்களுக்கு தெரிய வந்தது.