
ஊட்டி: ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. இதில் பெரும்பாலான அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்துக் கொள்ளும் மாநாடு, தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி தலைமையில் நடந்து வந்தது.