
நெல்லூர்: பஹல்காம் தாக்குதலில் இறந்த ஆந்திர பொறியாளர் மதுசூதன்ராவின் உடலுக்கு மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அஞ்சலி செலுத்தினார். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், காவலி பகுதியை சேர்ந்த வாழைப்பழ வியாபாரி திருப்பாலின் மகன் மதுசூதன் ராவ் (42). பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்த இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் மேது (17) எனும் மகளும் தத்து (13) என்கிற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் கோடை விடுமுறைக்கு மதுசூதன் ராவ் தனது குடும்பத்தாருடன் காஷ்மீர் சென்றிருந்தார். அங்கு பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தடைந்தது. பிறகு காரில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.