
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் துடு பசந்த்கர் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்தார். பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஹவில்தார் ஜான்டு அலி ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.