
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்கும் நிலையில், ஆளுநருக்கு எதிரான போராட்ட அறிவிப்புகளால் ஊட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் இன்றும், நாளையும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடக்கிறது. மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்கிறார். சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பங்கேற்கிறார். இதில், கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை 10.35 மணிக்கு கோவை வருகிறார்.