
விரக்தி பேச்சின் மூலம் மீண்டும் விவாத அரங்கிற்குள் வந்திருக்கிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.
சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர் வைத்த கோரிக்கைக்கு, “யாரிடம் நிதி, திறன், அதிகாரம் உள்ளதோ அந்த அமைச்சரிடம் கேளுங்கள்” என விரக்தியுடன் பதிலளித்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதுபற்றி பேரவைக்கு வெளியே கருத்துச் சொன்ன பாஜக எம்எல்ஏ-வான வானதி சீனிவாசன், “திமுக அரசு மீது அமைச்சர்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சு” என்றார்.