
கோவை: “பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளரும், நடிகையுமான விந்தியா பேசினார். மேலும், ஜய்யை அரசியல் தலைவராக பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.
பெண்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து, கோவை மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் செஞ்சிலுவை சங்கம் அருகில் இன்று (ஏப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளரும், நடிகையுமான விந்தியா பேசியது: “திமுக ஆட்சியில் தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் தொல்லையால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.