
மதுரை: குடும்ப பிரச்சினையில் ஜமாத் பிறப்பித்த உத்தரவை மீறி நீதிமன்றம் சென்ற வழக்கறிஞர் குடும்பத்துடன் ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டது குறித்து வட்டாச்சியர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூரை சேர்ந்த முகமது அப்துல்லா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நான் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறேன். எனது ஊரைச் சேர்ந்த பெண்ணுக்கு எனக்கும் கடந்த 2017ல் முஸ்லிம் ஜமாத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.