
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அமித் ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.