
ஊட்டி: அமைச்சர் பொன்முடி புகைப்படத்தை செருப்பால் அடித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஊட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊட்டி ஏடிசி பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.