• April 24, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் குஜராத் அரசு மற்றும் குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை மே 6, 7-ம் தேதிகளில் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே மகேஸ்வரி மற்றும் ராஜேஷ் பின்டால் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளி ஒருவர் சார்பில் ஆஜரான முத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டேவிடம், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றசாட்டுகளை தலைப்பு வாரியாகவும், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் மற்றும் அவற்றுக்கு எதிரான வாதங்களை தொகுத்து மே 3-ம் தேதிக்கு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதேபோல் பிற குற்றவாளிகளும், குஜராத் அரசும் தங்களின் வாதங்களைத் தொகுத்து தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *