
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் நாளில் கவுதம் கம்பீருக்கு 2 மிரட்டல் இ-மெயில்கள் வந்துள்ளன. இது குறித்த தகவல் இன்று (ஏப்.24) காலை வெளியாகியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் பயங்கரவாதிகள் இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியதாகத் தெரிகிறது. அதில், ‘நான் உன்னை கொலை செய்வேன்’ என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. இதே மிரட்டலுடன் கூடிய மெயில் ஒன்று நேற்று காலையிலும். மற்றொன்று மாலையிலும் வந்துள்ளது.
கம்பீருக்கு இதுபோன்ற மிரட்டல் மின்னஞ்சல் வருவது இது முதன்முறை அல்ல. ஏற்கெனவே கடந்த நவம்பர் 2021-ல் கூட காம்பீர் எம்.பி.யாக இருந்தபோது இதுபோன்ற மின்னஞ்சல் வந்திருந்தது நினைவுகூரத்தக்கது.