
கான்பூர்(உத்தரப்பிரதேசம்): “பயங்கரவாதம் அதன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது; அது விரைவில் முடிவுக்கு வரும்; பிரதமர் மோடியின் தலைமையை நாடு நம்ப வேண்டும்.” என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது சுபம் திவேதியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சுபம் திவேதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.