• April 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்து, சாட்சி விசாரணையை தொடங்கி 6 மாதத்துக்குள் வழக்கை விசாரித்து முடிக்குமாறு வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.92 கோடி அளவுக்கு சொத்து குவிப்பி்ல் ஈடுபட்டதாக கடந்த 2002-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன், மனைவி சாந்தகுமாரி, மகன் கதிர் ஆனந்த் எம்.பி., மருமகள் சங்கீதா மற்றும் சகோதரர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *